6 8 scaled
உலகம்செய்திகள்

அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ

Share

அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ

பெல்ஜியத்தில் இருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த சுவீடன் – பெல்ஜியம் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இரண்டு ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இதனை நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘பெல்ஜியத்தில் இருந்து வந்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்தேன், மேலும் யாருடைய அன்புக்குரியவர்கள் அர்த்தமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனேடியர்கள் நம் பெல்ஜியம் மற்றும் சுவீடிஷ் நண்பர்களுக்காக உடன் நிற்கிறோம் – மேலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...