7 7
உலகம்செய்திகள்

ட்ரூடோவின் பழிவாங்கல்..! மீண்டும் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்

Share

கனடா (Canada), அமெரிக்கா மீது பழிவாங்கும் நோக்கில், வரியை அதிகரிக்குமானால், அமெரிக்கா தனது பரஸ்பர வரியை அதே அளவில் அதிகரிக்கும் என டொனால்ட் டர்ம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதித்தமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப், 30 நாட்கள் தற்காலிகமாக விடுவித்திருந்த வரிக்கட்டுப்பாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து கனேடியப் பொருட்களுக்கும் 25வீத வரி விதித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், 25 வீத பதிலடி வரிகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு விதிக்கவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப், தனது சமூக வலைதளம் ஒன்றில் ட்ரூடோவின் இந்த பழிவாங்கல் நடவடிக்கை குறித்து கடும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் தனது பதவில், “அமெரிக்கா மீது பழிவாங்கும் வரியை ட்ரூடோ விதிக்கும் போது, ​​எமது பரஸ்பர வரி உடனடியாக அதே அளவு அதிகரிக்கும் என்பதை கனேடிய பிரதமர், ட்ரூடோவிற்கு விளக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...