7 6
உலகம்செய்திகள்

கனடா பின்னோக்கி செல்லாது – ஜஸ்டின் ட்ரூடோ

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதித்தமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

“இன்று, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளியான கனடாவிற்கு எதிராக வணிகப் போரை ஆரம்பித்துள்ளது,” தெரிவித்துள்ளார்.

“அதே நேரத்தில், அவர்கள் ரஷ்யாவுடன் நேர்மறையாக செயல்பட விரும்புகிறார்கள், விளாடிமிர் புடினை சமாதானப்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் தற்காலிகமாக 30 நாட்கள் விடுவித்திருந்த வரிக் கட்டுப்பாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து கனடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, கனடா இரண்டு கட்டங்களில் அமெரிக்காவுக்கு எதிராக $30 பில்லியன் வரிக்கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்துகிறது.

மேலும் $125 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 21 நாட்கள் கழித்து கூடுதல் வரிகள் விதிக்கப்பட உள்ளது. “கனடியர்கள் நாகரிகமானவர்கள், ஆனால் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டார்கள்,” என்று ட்ரூடோ உறுதியளித்தார்.

கனடாவின் நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, 25% பதிலடி வரிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, கழிவறை காகிதம், ஆடைகள், பாதணி, அழகு சாதனப் பொருட்கள், பயணப்பைகளின் உட்பட பலவகை பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...

01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...