24 6639bd8e05350
உலகம்செய்திகள்

Zero Balance Account கொண்ட பழங்குடி பெண் வேட்பாளர்!

Share

சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடி பெண் வேட்பாளர் கவனத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பழங்குடி பெண் வேட்பாளர் தனது வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாதது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோர்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பைகா பழங்குடி பெண் வேட்பாளர் சாந்தி பாய் மராவி (33 வயது). இவர், தனது வேட்புமனுவில் தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை எனவும் Zero Balance Account மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மாதரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இவரது வங்கிக் கணக்கிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் வந்துள்ளதையும் வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

மேலும், இவருடைய மொத சொத்து மதிப்பு 97 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ,12,000 செலுத்த வேண்டும் என்ற நிலையில் பழங்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து தான் செலுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...