24 6639bd8e05350
உலகம்செய்திகள்

Zero Balance Account கொண்ட பழங்குடி பெண் வேட்பாளர்!

Share

சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடி பெண் வேட்பாளர் கவனத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பழங்குடி பெண் வேட்பாளர் தனது வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாதது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோர்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பைகா பழங்குடி பெண் வேட்பாளர் சாந்தி பாய் மராவி (33 வயது). இவர், தனது வேட்புமனுவில் தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை எனவும் Zero Balance Account மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மாதரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இவரது வங்கிக் கணக்கிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் வந்துள்ளதையும் வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

மேலும், இவருடைய மொத சொத்து மதிப்பு 97 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ,12,000 செலுத்த வேண்டும் என்ற நிலையில் பழங்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து தான் செலுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...