6 1 scaled
உலகம்செய்திகள்

விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

Share

விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைத்த போது, 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 18 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்பு, விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைப்பதற்காக கிராமத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அப்போது, விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவர், சிறுமியர் 7 பேர் குளத்தில் மூழ்கினர்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், 3 சிறுவர்களை காப்பாற்றினார். எனினும், 3 சிறுமிகள் உள்பட 4 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...