2 4
உலகம்செய்திகள்

ஆரம்பமாகிய வர்த்தகப் போர்: அமெரிக்காவுக்கு கனடா பதிலடி

Share

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமும் அதன் பொருளாதார மையமுமான ஒன்டாரியோ மாகாண நிர்வாகமானது, பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள அரசாங்க ஒப்பந்தங்களை ஏலம் எடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் அமெரிக்க வரி அதிகரிப்பு திட்டத்திற்கு பதிலடியாக எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உடனான ஒப்பந்தத்தை கைவிட்டுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் “கனடாவின் பொருளாதாரத்தை அழிக்கத் துடிக்கும் மக்களுடன் வணிகம் செய்ய முடியாது” என ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் எக்ஸ் தளத்தில் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக, டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரியும், சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பில், கடந்த சனிக்கிழமையன்று ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த வரிக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், மெக்ஸிகோ மற்றும் சீனாவும் இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.

வட அமெரிக்க நாடுகளாகிய கனடா மற்றும் மெக்ஸிகோ அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.

கனடாவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவுடன் நீண்ட எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்த இரு நாடுகளும் (கனடா மற்றும் மெக்ஸிகோ) தங்கள் எல்லைகளை வலுப்படுத்தவில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறிகளை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கின்றன என்றும் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும், ஃபென்டனில் போதை மருந்து, கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவிற்கு வருவதாகவும் ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...