உலகம்செய்திகள்

தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்

Share
24 665f78abed6e3
Share

தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்

டொயோட்டா (Toyoda) நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

கொலிசன் டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகள் உரிய முறையில் பரிசோதிக்கப்படால் அவற்றுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா தான் மிகவும் வருந்துவதாகவும் “I AM TRULY SORRY” என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Share
Related Articles
14 5
இலங்கைசெய்திகள்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்...

12 5
இலங்கைசெய்திகள்

வாக்களிக்க தகுதியுள்ள மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கையில் நாளை(6) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க...

15 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும்...

13 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,...