உலகம்செய்திகள்

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்

Share
இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்
இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்
Share

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்

பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட விவகாரம் தற்போது தீயாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் BBC செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பிரபலம் ஒருவர் என தகவல் கசிய, பல பிரபலங்களும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்த ஊடக பிரபலம் யார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஊடக பிரபலம் அந்த இளைஞரின் அந்தரங்கப் புகைப்படங்களுக்காக 35,000 பவுண்டுகள் வரையில் செலவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் தெரிவிக்கையில், அந்த பணத்தால் தமது பிள்ளை போதை மருந்து பழக்கத்திற்கு இரையானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் BBC செய்தி நிறுவனத் தலைவர்களுக்கு மே 19ம் திகதி முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த பிரபலம், அதன் பின்னரும் சக பிரபலங்களுடன் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதும், BBC செய்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் காணப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளைஞரின் அந்தரங்கப் புகைப்படம் கோரிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Gary Lineker, Rylan Clark மற்றும் Jeremy Vine உட்பட பல ஊடக பிரபலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Mark Williams Thomas, பொதுமக்களுக்கு அந்த நபரை அம்பலப்படுத்த வேண்டும் என கூறியதுடன், BBC செய்தி நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பவர்களேனும் அந்த பிரபலம் யார் என்பதை அறிய வேண்டும் என்றார்.

ஒரு மாத காலமாக இந்த விவகாரத்தை BBC செய்தி நிறுவனம் விசாரித்து வருகிறது. இன்னும் தாமதப்படுத்தாமல், அந்த பிரபலத்தின் பெயரை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தாயார் தமது புகார் மனுவில் குறிப்பிடுகையில், தமது பிள்ளைக்கு 17 வயதிருக்கும் போது தான் முதல் முறையாக, கடந்த 2020ல் குறுந்தகவல்கள் அந்த நபரிடம் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தாம் தமது பிள்ளையின் வாழ்க்கையை தொலைக்க வைத்தவர். போதை மருந்துக்கு அடிமையாக காரணம்.

ஒருமுறை 5,000 பவுண்டுகள் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த தொகை தமது பிள்லையின் அந்தரங்கப் புகைப்படத்திற்கான கட்டணம் என்பது தமக்கு தெரியவந்தது என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...