உலகம்செய்திகள்

தமிழக மக்களின் கவனத்திற்கு.. 4 பேருக்கு JN.1 புதிய வகை கொரோனா தொற்று உறுதி

Share

தமிழக மக்களின் கவனத்திற்கு.. 4 பேருக்கு JN.1 புதிய வகை கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் 4 பேருக்கு JN.1 புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக JN.1 என்ற வகை கொரோனா திரிபு பரவி வருகிறது.பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் கொரோனா தொற்று மட்டுமல்லாமல் பிற நோய் தொற்றுக்கும் இந்த JN.1 என்ற வகை கொரோனா திரிபு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது, விடுமுறைக்காலம் என்பதால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதால் சுவாச தொற்று நோய்கள் ஏற்படுகின்றது. இதற்கிடையே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இந்தியாவில் 64 பேருக்கு JN.1 என்ற வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழகத்தில் 4 பேருக்கும் JN.1 என்ற வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உள்ள மூதாட்டிக்கு இந்த கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...