டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் £300,000 (சுமார் $400,000) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
2கர்னல் Archibald Gracie எழுதிய இந்த கடிதம், Wiltshire இல் உள்ள Henry Aldridge and Son ஏல இல்லத்தில் நேற்றையதினம்(28) ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.
இதன் எதிர்பார்க்கப்பட்ட விலையான £60,000 ஐ விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு இது ஏலம் போயுள்ளது.
இந்த கடிதம் “தீர்க்கதரிசனமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், கர்னல் Gracie தனது நண்பர் ஒருவருக்கு எழுதியதில், “அந்த அழகான கப்பல்” குறித்து முழுமையாக தீர்ப்பளிப்பதற்கு முன் தனது “பயணத்தின் முடிவை” தான் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. அன்றுதான் அவர் சௌத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியுள்ளார்.
மேலும், வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இது எழுதப்பட்டுள்ளது.