rtjy 3 scaled
உலகம்செய்திகள்

‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள்

Share

5 உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள் பற்றி தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.

சமீபத்தில் உலகையை உலுக்கிய சம்பவம் என்றால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமாகி உயிரிழந்தது தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஆழ்கடலில் மூழ்கியுள்ள இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிட சாகச சுற்றுலாவை நடத்தி வருகிறது.

அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 கோடீஸ்வரர்கள் சென்றனர்.

கடந்த வாரம் அவர்கள் சென்ற அந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் தகவல் இணைப்பு திடீரென்று துண்டாகி மாயமானது.

இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டனர். இச்சம்பவம் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்நிலையில், தற்போது அந்த 5 கோடீஸ்வரர்களின் உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் ஏகப்பட்ட குறைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் ஆழ்கடலில் பல முறை பயணம் செய்துள்ளார். ஆனால், அவர் டைட்டனின் வடிவமைப்பு குறித்து பல கவலையான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் கடலில் ஆழமாக செல்ல செல்ல நீருக்கடியில் அழுத்தம் அதிகரிக்கும். அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியில் 4,000 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கிடக்கின்றன. அப்பகுதியில் அழுத்தம் 400 (bar) பாராக இருக்கும்.

அந்த இடத்திற்கு செல்லும்போது நம்முடைய நாம் இயல்பாக சுவாசிப்பதைவிட 400 மடங்கு அதிகமாக சுவாசிப்போகும். நம் உடலில் உள்ள ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் அதிகரிக்கும். அந்த அழுத்ததை தாங்கக்கூடிய வகையில் ‘டைட்டன்’ கப்பல் வடிவமைக்கப்படவில்லை.

நாம் பொழுதுபோக்கிற்காக ஆழ்கடலில் செல்ல வேண்டுமானால் 40 மீட்டர் தூரம் வரை தான் செல்ல முடியும். இந்த உயிரிழப்புக்கு காரணம், டைட்டன் கப்பலின் பொருள் தேர்வு, வடிவமைப்பு, கார்பன் ஃபைபர் கலவையானது டைட்டானியத்துடன் இணைப்பு, உயர் அழுத்தம் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...