tamilni 73 scaled
உலகம்செய்திகள்

புடினைப்போலவே தோற்றமளிக்கும் மூன்றுபேர்… விரைவில் கொல்லப்படலாம் என உக்ரைன் தகவல்

Share

புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புடின் இறந்துவிட்டதாகவும், புடினுக்கு பதிலாக, அவரைப்போல் தோற்றமளிக்கும் ஒருவர்தான் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusovம், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புத்தாண்டையொட்டி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின் உண்மையில் புடின் இல்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

புடினுடைய கழுத்து அவருடைய உடலுடன் பொருந்தாதது போல் காட்சியளித்ததாக அந்த உரையைக் கேட்டவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேரும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusov தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருபோதும் சேர்ந்து இருப்பதில்லை என்றும், அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படம் எதுவும் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எப்போது அவர்களுடைய தேவை முடியுமோ, அப்போது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் Andriy Yusov தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைப் பொருத்தவரை தேவையில்லாதவர்களை கொன்றுவிடுவது பெரிய விடயமே அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...