tamilni 73 scaled
உலகம்செய்திகள்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

Share

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு Rap பாடகர் கைது செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் ராப்பர் கில்லர் மைக் (Killer Mike) மூன்று விருதுகளை வென்றார்.

ஆனால் மேடையில் விருதுகளை பெற்றுக்கொண்ட அவரை அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Rapper Killer Mike, Michael Render, Grammy Awards 2024, Grammys 2024, 66th Annual Grammy Awards, Award ceremony, மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

48 வயதான ராப்பரின் முழுப் பெயர் மைக்கேல் ரெண்டர் (Michael Render). அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் 243(A) PC இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​​பொலிஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

சிறந்த ராப் ஆல்பம், சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த ராப் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் ராப்பர் மைக் விருதுகளை வென்றார்.

எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் விருது பெற்ற பிறகு, அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார், விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிப்டோ டாட்காம் அரங்கில் நடந்த சண்டைக்காக ராப் பாடகர் மைக் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

ராப்பர் மைக் தனது பாடல்களில் சமூக நீதி, இனவெறி மற்றும் கறுப்பின பிரச்சனைகள் பற்றி பாடுகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

25 68ff93f31cee3
செய்திகள்இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: கைதானவர் குறித்த காணொளி பதிவு – காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக...

25 68ef777f06ff0
இலங்கைசெய்திகள்

அவிசாவளை நீதிமன்றத்தில் போலித் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது: விளக்கமறியலில் உத்தரவு

போலித் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நிலையில், அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரைப்...