உலகம்செய்திகள்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

tamilni 73 scaled
Share

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு Rap பாடகர் கைது செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் ராப்பர் கில்லர் மைக் (Killer Mike) மூன்று விருதுகளை வென்றார்.

ஆனால் மேடையில் விருதுகளை பெற்றுக்கொண்ட அவரை அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Rapper Killer Mike, Michael Render, Grammy Awards 2024, Grammys 2024, 66th Annual Grammy Awards, Award ceremony, மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

48 வயதான ராப்பரின் முழுப் பெயர் மைக்கேல் ரெண்டர் (Michael Render). அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் 243(A) PC இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​​பொலிஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

சிறந்த ராப் ஆல்பம், சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த ராப் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் ராப்பர் மைக் விருதுகளை வென்றார்.

எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் விருது பெற்ற பிறகு, அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார், விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிப்டோ டாட்காம் அரங்கில் நடந்த சண்டைக்காக ராப் பாடகர் மைக் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

ராப்பர் மைக் தனது பாடல்களில் சமூக நீதி, இனவெறி மற்றும் கறுப்பின பிரச்சனைகள் பற்றி பாடுகிறார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...