tamilni 73 scaled
உலகம்செய்திகள்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

Share

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு Rap பாடகர் கைது செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் ராப்பர் கில்லர் மைக் (Killer Mike) மூன்று விருதுகளை வென்றார்.

ஆனால் மேடையில் விருதுகளை பெற்றுக்கொண்ட அவரை அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Rapper Killer Mike, Michael Render, Grammy Awards 2024, Grammys 2024, 66th Annual Grammy Awards, Award ceremony, மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்

48 வயதான ராப்பரின் முழுப் பெயர் மைக்கேல் ரெண்டர் (Michael Render). அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் 243(A) PC இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​​பொலிஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

சிறந்த ராப் ஆல்பம், சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த ராப் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் ராப்பர் மைக் விருதுகளை வென்றார்.

எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் விருது பெற்ற பிறகு, அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார், விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிப்டோ டாட்காம் அரங்கில் நடந்த சண்டைக்காக ராப் பாடகர் மைக் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

ராப்பர் மைக் தனது பாடல்களில் சமூக நீதி, இனவெறி மற்றும் கறுப்பின பிரச்சனைகள் பற்றி பாடுகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...