6 8 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Share

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து விவேக் ராமசாமியையும் அவரின் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய உள்ளதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

டைலர் அன்டர்சன் (Tyler Anderson)என்ற நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரின் அனுப்பிய குறுஞ்செய்திகளில் கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது.

விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகளுக்கு குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றதையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணும் கைது செய்தவரின் தொலைபேசி எண்ணும் தொடர்புபட்டதை தொடர்ந்தே அவர் கைத செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விரைந்த செயற்பட்டு அவரை கைது செய்த சட்ட நடைமுறையாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆண்டர்சன் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைமூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் என்பவற்றை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...