மீண்டும் வீழ்ச்சியடையும் டொலரின் பெறுமதி
நேற்றைய தினத்தை விட இன்று (04) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூ. 305.58 முதல் ரூ. 311.42 மற்றும் ரூ. 320.61 முதல் ரூ.326.74 ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 307.58 முதல் ரூ. 309.78 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூ. 322 முதல் ரூ. 325 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 310 முதல் ரூ. 313 மற்றும் ரூ. 322 முதல் ரூ.325 ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment