24 663dbd1239022
உலகம்செய்திகள்

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

Share

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் 600 மதிப்பெண்களுக்கு 494 மதிப்பெண்கள்எடுத்துள்ளார்.

இவர், தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததால், அதற்கு மேல் வாங்க முடியவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது மாணவரின் பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரை காணவில்லை. அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த கம்பம் காவல் நிலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்று மாணவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...