24 663dbd1239022
உலகம்செய்திகள்

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

Share

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் 600 மதிப்பெண்களுக்கு 494 மதிப்பெண்கள்எடுத்துள்ளார்.

இவர், தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததால், அதற்கு மேல் வாங்க முடியவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது மாணவரின் பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரை காணவில்லை. அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த கம்பம் காவல் நிலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்று மாணவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...