3 3 scaled
உலகம்செய்திகள்

பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மரணம்! வலுக்கும் எதிர்ப்பு

Share

பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மரணம்! வலுக்கும் எதிர்ப்பு

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு மாணவன் சுமந்த தாஸ் உயிரிழந்தார்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஆசிரியரால் மாணவன் அடிக்கப்பட்டான். வீடு திரும்பிய மாணவன் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.

தனது அனுமதியின்றி சைக்கிளை எடுத்துச் சென்றதாக சக மாணவர் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆசிரியர் தனது மகனை அடித்ததாக சுமந்த தாஸின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...