31 2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்

Share

பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நேற்று(19) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் 17 வயதுடைய சிறுமி மற்றும் 64 வயது முதியவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றவாளியும், பாதிக்கபட்டவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருக்கலாம் என்றும், இது தனிப்பட்ட சம்பவம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோர்டன்(Gorton) பகுதியில் உள்ள Barnard சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், அப்பகுதியில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...