tamilni 75 scaled
உலகம்செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

Share

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

மது வாங்க பணம் தராததால் 71 வயது தாயை அவரது மகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71).

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகேயுள்ள ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம், தூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, நமகோடி ஆத்திரத்தில் கட்டை ஒன்றால் தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காசம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மகன் நமகோடியையும் பொலிஸார் கைது செய்தனர்.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...