cl1NpVOR6TZC0uJNXgMn
உலகம்செய்திகள்

மாணவனின் தலைமுடியை வெட்டிய பாடசாலை!

Share

கனடா – ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை வெட்டிய சம்பவத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பாடசாலையில் 4ஆம் வகுப்பு மாணவனின் முடியையே வெட்டியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவனுக்கு பிடித்தமான ஒன்று அவனது தலை முடி எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், கடந்த 4ம் திகதி (04-04-2023) பாடசாலை நேரத்தில் தொடர்புடைய மாணவனின் தலை முடியில் ஒட்டக்கூடிய, சிவப்பு நிறப் பொருள் காணப்பட்டதாகவும், அதை நீக்க தலை முடியை கத்தரிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் பாடசாலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், பெற்றோருடன் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு முறையானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பாடசாலை அளித்த விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை எனவும், இனி அந்த பாடசாலையில் தமது மகனை அனுப்புவது பாதுகாப்பானதாக இருக்காது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையான சந்தர்ப்பங்களில் தமது மகன் ஒருமுறை கூட முடி கத்தரிக்கும் போது சகஜ நிலையில் இருந்ததில்லை எனவும், தங்களை அவன் எட்டித்தள்ளியிருப்பதையும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படியான சூழலில், பாடசாலை நிர்வாகம் அளித்துள்ள அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...