24 65fd9f4c0339f
உலகம்செய்திகள்

கனடா வாழ் புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்

Share

கனடா வாழ் புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்

கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக கனடாவில் மக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக மட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (21) கருத்து தெரிவித்த கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர்,

அடுத்த 3 ஆண்டுகளில், குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கட்டுப்பாடு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

கனடாவில் நிலவும் வீட்டுப்பற்றாக்குறைக்கு தீர்வாகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கனடாவின் மக்கள் தொகையை 20% குறைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...