19 2
இந்தியாஉலகம்செய்திகள்

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

Share

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார்.

குஷ்பு பேசுகையில், “இந்த பேரணிக்கு திமுக அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம், பேரணி நடத்தினாலும் எங்களுக்கு அனுமதி கொடுப்பதே இல்லை.

அதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள் உண்மையை பேசுவோம் என்று திமுகவுக்கு தெரியும். அதனால் தான் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

இதையடுத்து, தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...