download 5 1 8
உலகம்செய்திகள்

காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர்!

Share

பெருவில் பொது இடத்தில் முன்னாள் காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெனிசுவேலாவைச் சேர்ந்த 19 வயதான Sergio Tarache Parra என்பவர், 18 வயதுடைய Katherine Gomez தீ வைத்து எரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் பெரு தலைநகர் லீமாவில் சென்ற மாதம் 18ஆம் திகதி நடந்தது. அதற்குச் சில நாள் முன்பு தான் Gomez அவரிடமிருந்து பிரிந்ததாகக் கூறப்பட்டது.

உடலில் 60 சதவீத தீக் காயங்களுடன் Gomez மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர்e கொலம்பியாவில் கைது செய்யப்பட்டார்.

கொலம்பியாவிலிருந்து பெருவிற்கு அனுப்பப்படுவார் என்று பெருவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்தது.

அவரைப் பற்றித் தகவல்கள் அளிப்போருக்கு 12,500 டொலர் வழங்குவதாகப் பெரு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....