ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. படகில் 2 சிறுவர்கள் உட்பட 24 சுற்றுலாப் பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இந்தப் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு ஆபத்தில் இருக்கின்றது எனக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பின்னர் படகு கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து ஜப்பான் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹெலிஹொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான படகைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
எனினும், படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பயணம் செய்த 26 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. படகைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WorldNews
1 Comment