சுற்றுலாப் படகு மாயம்
உலகம்செய்திகள்

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலாப் படகு மாயம்!

Share

ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. படகில் 2 சிறுவர்கள் உட்பட 24 சுற்றுலாப் பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இந்தப் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு ஆபத்தில் இருக்கின்றது எனக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பின்னர் படகு கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து ஜப்பான் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹெலிஹொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான படகைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

எனினும், படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பயணம் செய்த 26 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. படகைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...