OIP 15
உலகம்செய்திகள்

தங்க வளையலை கழற்றி அலட்சியமாக வைத்த சிறுமி.., தூக்கிச்சென்று கூடு கட்டிய காகம்

Share

சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம் நடைபெற்ற நாளில் உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். அங்கு, இவர்களது ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளான சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.

அப்போது, திருமணத்திற்கு வந்ததும் சிறுமி தான் அணிந்திருந்த தங்க வளையலை கழற்றினார். ஒரு பேப்பரில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை சுற்றி பையின் மேல் வைத்துள்ளார்.

அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் வளையலை பத்திரமாக வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், சிறுமி அதனை கவனிக்கவில்லை.

இதன் பின்னர், 10 நாட்கள் கழித்து உறவினர் வீட்டில் இருந்து நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது, சிறுமியிடம் தங்க வளையல் இல்லாததை பார்த்து அதிர்ச்சியாகினர். அப்போது அவர்கள் சிறுமியிடம் கேட்டனர்.

அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார். ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.

அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர்.

அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...