12 22
உலகம்செய்திகள்

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

Share

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள பெத் யாகோவ் சபைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு கெமராவில் சந்தேகநபர் ஒருவர் பாலஸ்தீன கொடியொன்றை வைத்திருப்பது பதிவாகியுள்ளது.

இதன் படி, இந்த வெடிப்பு சம்பவமானது, பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யூத மக்கள் மீதான தாக்குதல் இந்த சம்பவத்தின் பின்னர் பிரான்ஸில் யூதர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னால் பாரிய நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்தோடு, சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் யூத மக்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...