உலகம்செய்திகள்

அதிகாலையில் ஆம்னி வேனில் சென்ற குடும்பம்! 6 பேர் பரிதாபமாக பலி

Share

அதிகாலையில் ஆம்னி வேனில் சென்ற குடும்பம்! 6 பேர் பரிதாபமாக பலி

தமிழக மாவட்டம் சேலம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை. பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர்கள் இவர்களுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது மகள் உள்ளார்.

இதில், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், நேற்று பிரியாவின் பெற்றோர் கொண்டாலம்பட்டி சென்று இருவருக்கும் இடையே சமரசம் செய்தனர்.

ஆனால், உடன்பாடு ஏற்படாததால் குடும்பத்துடன் இன்று அதிகாலை மகளை அழைத்துச் செல்வதாக கூறி கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு ஆம்னி வேனில் சென்றனர். இந்த ஆம்னி வேனில் 8 பேர் சென்றனர்.

இந்நிலையில், சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூர் என்ற பகுதியில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதியது.

இதில், ஆம்னியில் பயணித்த குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலிருந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...