உலகம்செய்திகள்

அதிகாலையில் ஆம்னி வேனில் சென்ற குடும்பம்! 6 பேர் பரிதாபமாக பலி

Share
Share

அதிகாலையில் ஆம்னி வேனில் சென்ற குடும்பம்! 6 பேர் பரிதாபமாக பலி

தமிழக மாவட்டம் சேலம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை. பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர்கள் இவர்களுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது மகள் உள்ளார்.

இதில், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், நேற்று பிரியாவின் பெற்றோர் கொண்டாலம்பட்டி சென்று இருவருக்கும் இடையே சமரசம் செய்தனர்.

ஆனால், உடன்பாடு ஏற்படாததால் குடும்பத்துடன் இன்று அதிகாலை மகளை அழைத்துச் செல்வதாக கூறி கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு ஆம்னி வேனில் சென்றனர். இந்த ஆம்னி வேனில் 8 பேர் சென்றனர்.

இந்நிலையில், சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூர் என்ற பகுதியில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதியது.

இதில், ஆம்னியில் பயணித்த குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலிருந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...