25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

Share

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படை மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், ஹமாஸ் படைகள் போர்நிறுத்ததை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் படைகள் காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தன.

இதையடுத்து, ரஃபா பகுதியில் நேற்று (28) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், காஸா மீது தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், காஸா மீது நேற்று (28) இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் இராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், 46 குழந்தைகள் உள்பட 104 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 253 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போர்நிறுத்ததை மீறியதாகக் கூறப்படும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் படை மறுத்துள்ளது.

இந்தத் தாக்குதலானது, கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி முதல், காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், இஸ்ரேலின் இராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காஸா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...

250822 ranil arrest 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனது...