8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை
உலகம்செய்திகள்

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

Share

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

அமெரிக்காவில் 8 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைக்கேல் மெடினா. இவர் தனது 8 வயது மகள் சரபி மெடினா உடன் போர்ட்டேஜ் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இரவு 8.40 மணியளவில் தந்தை-மகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து மகளை காப்பாற்ற அந்நபருடன் மைக்கேல் மெடினா போராடியுள்ளார். பின்னர் உடனடியாக சிறுமி சரபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.

அவரின் பெயர் மைக்கேல் குட்மேன் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...