8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை
உலகம்செய்திகள்

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

Share

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

அமெரிக்காவில் 8 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைக்கேல் மெடினா. இவர் தனது 8 வயது மகள் சரபி மெடினா உடன் போர்ட்டேஜ் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இரவு 8.40 மணியளவில் தந்தை-மகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து மகளை காப்பாற்ற அந்நபருடன் மைக்கேல் மெடினா போராடியுள்ளார். பின்னர் உடனடியாக சிறுமி சரபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.

அவரின் பெயர் மைக்கேல் குட்மேன் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...