24 66c995a3588c5
உலகம்

வெளிநாடொன்றில் கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரின் தலையில் அடித்த அரசியல்வாதியால் சர்ச்சை

Share

வெளிநாடொன்றில் கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரின் தலையில் அடித்த அரசியல்வாதியால் சர்ச்சை

கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரை தலையில் அடித்த அரசியல்வாதி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில்(thailand) நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாய்லாந்து நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் வெளியேறிசென்றார்.இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
13144814 trump visa
செய்திகள்உலகம்

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள்: உடல் பருமன், நீரிழிவு இருந்தால் விசா நிராகரிக்கப்படலாம் – ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு!

அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு, நீரிழிவு (Diabetes) அல்லது உடல் பருமன் (Obesity)...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...