8 15
உலகம்செய்திகள்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

Share

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, இன்றைய தினம் கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டருந்தனர்.

இது குறித்து கனேடிய நீதித்துறை அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தனது முகநூல் பதிவில்,

“இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வலிமை மற்றும் மீள் எழுச்சி தன்மையை இது கௌரவிக்கின்றது. அவர்களின் அர்ப்பணிப்பே இந்த நினைவுத்தூபி உருவாகுவதற்கான காரணம்.

நான் கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் ,கனடா தமிழர் தேசிய பேரவை பிரம்டன் தமிழ் சங்கம் ஆகிய தரப்பினருக்கும் எங்கள் கதைகள் ஒருபோதும் மறக்கப்படாமலிருப்பதற்காக போராடியவர்களிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுக்கும் அதேவேளை ஐக்கியப்பட்டவர்களாக வலிமையானவர்களாக விளங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...

9 15
உலகம்செய்திகள்

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத்தூபி

கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்று(11) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்தால்...

6 16
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இருந்து பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக...

7 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய றம்பொடை விபத்து! ஜனாதிபதி அநுரவின் செய்தி

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...