1 26
உலகம்செய்திகள்

கனடாவில் மற்றுமொரு தமிழின அழிப்பு நினைவகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Share

தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.

டொரோன்டோவில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் சமூகத்துடன் இணைந்து Toronto நகரசபை பணியாற்ற இந்தத் தீர்மானம் கோரப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் Josh Matlow வழிமொழிந்துள்ளார்.

தனது தீர்மானத்தை Toronto நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியதில் பெருமை கொள்கிறேன் என வாக்கெடுப்பின் முடிவில் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஆதரித்த நகர முதல்வர் Olivia Chow உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நினைவகம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஒருபோதும் மறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என பார்த்தி கந்தவேள் நம்பிக்கை தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிக்கும் Scarborough-வில் இந்த நினைவகம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....