rtjy 225 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

Share

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள Tower of London என்ற கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் சுமார் 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல இடமும், பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கிரீடம் மற்றும் அணிகலன்களின் (crown jewels) காப்பிடமும் ஆகும்.

உலக பிரசித்தி பெற்ற Tower Bridgeல் செல்லும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய மக்களும், உல்லாசப் பயணிகளும் பல மணிநேரம் நடந்த இம்மாவீரர் வணக்கத்தைப் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயகத்தில் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, இன்றும் அவற்றின் எச்சங்கள் கூட இலங்கை அரசால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் லண்டன் மாநகரத்தில் இவ்வணக்கம் எந்தவித தடையும் இன்றி உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...