7 27
உலகம்செய்திகள்

ஈழத்தமிழர் விவகாரத்தில் பிரித்தானியா – கனடாவிடம் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

ஈழத்தமிழர்களுக்கு தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாழும் தீர்வுக்காக பொது வாக்கெடுப்பை நடத்த பிரித்தானியா, கனடாவும் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டும் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிஸ் உட்பட பல நாடுகளில் நீதிக்கான பேரணிகள் இடம்பெற்றிருந்தன.

பிர்த்தானியாவில் கடந்த 18ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் மற்றும் உலகத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட தமிழர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை, கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு தமது கண்டனத்தையும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...