tamilni 409 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்!

Share

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்!

தைவான் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்து முறைப்படி தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான மயிலாடுதுறை, சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

இந்நிலையில் நேற்று, இங்கு தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்களது நாட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் இவர்கள் இந்துமுறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

அதற்காக சீர்காழிக்கு வந்த அவர்களுக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணப்பெண் ருச்சென் பட்டுச்சேலை, மாலை அணிந்தும், மணமகன் யோங்சென் பட்டு வேட்டி, மாலை அணிந்தும் மணமேடைக்கு வந்தனர்.

அங்கு மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். அவர்களுக்கு, நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...