6 21
உலகம்செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய நாடுகடத்தலை தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்து

Share

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய நாடுகடத்தலை தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்து

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது.

இதற்கமைய, கடந்த 11ஆம் திகதி ஆப்கன் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுக்கு பிறகு சுவிட்சர்லாந்து இவ்வாறான ஒரு கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆப்கன் நாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டில் இறக்கி விட்டுள்ளதுடன் அவர்களின் செலவுகளுக்காக ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் பணத்தினையும் சுவிஸ் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

மேலும், முன்னதாக அவர்கள் இருவரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் இஸ்தான்புல்லுக்கு மீண்டும் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...