3 2
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தில் மாற்றம்

Share

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச மாணவர் விசாக்களுக்கான கட்டணத்தை 710 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 1,600 டொலர்களாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டிப்பாக்கியது.

தற்போது இதனை மீண்டும் அதிகரிப்பதாக ஆளும் தொழிலாளர் கட்சியும் பிரதான எதிர்கட்சியும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

முன்னதாகவே, அவுஸ்திரேலியாவின் பழமைவாத எதிர்ப்பு கட்சி, விசா கட்டணத்தை குறைந்தபட்சம் 2,500 முதல் 5,000 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது.

சர்வதேச மாணவர்கள், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளனர்.

ஆனால், அதிகளவான சர்வதேச மாணவர்களின் வருகை, அவுஸ்திரேலியாவில் சுகாதார மற்றும் ஏனைய பொதுச் சேவைகளின் செலவுகளையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...