24 65a118680d7e8
உலகம்செய்திகள்

ஜேர்மனியை ஸ்தம்பிக்கவைத்துள்ள வேலை நிறுத்தம்: தாக்குதலிலிருந்து தப்பிய அமைச்சர்

Share

ஜேர்மனியில் வாழ்க்கைச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணம், மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளும், போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்துள்ள விவசாயிகளும்.

ஜேர்மனியில் ரயில் சாரதிகள் புதன்கிழமை முதல், இன்று வெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள். பெரும்பாலான ரயில்கள் ஓடாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது பொது வேலைநிறுத்தம் போல் உள்ளது என்கிறார், ஆய்வமைப்பு ஒன்றைச் சேர்ந்த நிபுணரான கார்ஸ்டன் நிக்கல் (Carsten Nickel).

1906க்குப் பின் ஜேர்மனி ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கண்டதில்லை என்கிறார் அவர். இது ஜேர்மனிக்குப் புதிது என்று கூறும் அவர், இப்படி வேலைநிறுத்தமும், அரசியல் வன்முறையும் இதற்கு முன் இருந்ததில்லை என்கிறார் அவர்.

சமீபத்தில் பொருளாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் (Robert Habeck) தாக்கப்படுவதிலிருந்து சற்றே தப்பியதைத்தான் கார்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

சுமார் 300 விவசாயிகள் கூட்டமாகக் கூடி, அமைச்சர் பயணித்த படகிலிருந்து அவரை இறங்கவிடாமல் தடுத்துள்ளார்கள். அப்போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மனியின் பல்வேறு நகரங்களில் ட்ராக்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசு, டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டுள்ளார்கள். உண்மையில், கொரோனா நிதியைக்கொண்டு பல்வேறு நிதியுதவிகளை செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா உதவி நிதியை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், வாக்களித்த சில விடயங்களை அரசால் நிறைவேற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...