2 1
உலகம்செய்திகள்

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

Share

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

லிதுவேனியாவின் (Lithuania) வெளிவிவகார அமைச்சகம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கான புதிய விதிமுறைகளை 2024 டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் உள்ள லிதுவேனியாவின் துணைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, லிதுவேனியா விசா சேவை வழங்குநர்கள் மூலம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தகுதியான குடும்ப மீள் இணைவு, மருத்துவம் உட்பட்ட கல்வித் திட்டங்கள் மற்றும் கற்கைகள், அதிக திறன் வாய்ந்த வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு மாத்திரமே குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இருப்பினும், பருவகால வேலைளுக்கான விண்ணப்பங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கையில் உள்ள உள்ளூர் விசா சேவை அலுவலகங்கள் மூடப்படுவதால், விண்ணப்பதாரர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் லிதுவேனியாவின் துணைத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...