2 1
உலகம்செய்திகள்

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

Share

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

லிதுவேனியாவின் (Lithuania) வெளிவிவகார அமைச்சகம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கான புதிய விதிமுறைகளை 2024 டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் உள்ள லிதுவேனியாவின் துணைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, லிதுவேனியா விசா சேவை வழங்குநர்கள் மூலம் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தகுதியான குடும்ப மீள் இணைவு, மருத்துவம் உட்பட்ட கல்வித் திட்டங்கள் மற்றும் கற்கைகள், அதிக திறன் வாய்ந்த வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு மாத்திரமே குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இருப்பினும், பருவகால வேலைளுக்கான விண்ணப்பங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கையில் உள்ள உள்ளூர் விசா சேவை அலுவலகங்கள் மூடப்படுவதால், விண்ணப்பதாரர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் லிதுவேனியாவின் துணைத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...