32
உலகம்செய்திகள்

ட்ரம்பால் ஏற்பட்டுள்ள பயம்… வெறிச்சோடிக்கிடக்கும் நகரமொன்றின் தெருக்கள்

Share

வெளியே வந்தால் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால், அமெரிக்க நகரமொன்றின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதேபோல, அவர் பதவியேற்ற மறுநாளே, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில் புலம்பெயர்தல் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தினார்கள், 956 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, இப்போது சிகாகோவில் வாழும் புலம்பெயர்ந்தோர், அவர்கள் சட்டப்படி ஆவணங்களுடன் வாழ்ந்தாலும் சரி, ஆவணங்கள் இல்லையென்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. அதனால், பல தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் சமுதாய மையம் ஒன்றின் வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில், புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் என்ன செய்யவேண்டும் என சில ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் கதவைத் திறக்காதீர்கள், அமைதியாக இருங்கள், எந்த ஆவணத்திலும் கையெழுத்திடாதீர்கள் என்பது போன்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளன.

வழக்கமாக திறந்திருக்கும் அந்த மையத்தின் கதவு, தற்போது மூடியே வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பணி செய்யும் தன்னார்வலர்கள், மையத்துக்கு காலையில் வந்ததும், முதல் வேலையாக எங்கேயாவது புலம்பெயர்தல் அதிகாரிகள் மறைந்திருக்கிறார்களா என கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் வேலையையே துவங்குகிறார்கள்.

எங்களுக்குப் பயமாக இருக்கிறது, எங்கும் வதந்திகள் பரவிவருகின்றன, ஆகவே, எங்களைப் பிடித்து நாடுகடத்திவிடுவார்களோ என பயப்படுகிறோம், எங்களை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...