32
உலகம்செய்திகள்

ட்ரம்பால் ஏற்பட்டுள்ள பயம்… வெறிச்சோடிக்கிடக்கும் நகரமொன்றின் தெருக்கள்

Share

வெளியே வந்தால் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால், அமெரிக்க நகரமொன்றின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதேபோல, அவர் பதவியேற்ற மறுநாளே, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில் புலம்பெயர்தல் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தினார்கள், 956 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, இப்போது சிகாகோவில் வாழும் புலம்பெயர்ந்தோர், அவர்கள் சட்டப்படி ஆவணங்களுடன் வாழ்ந்தாலும் சரி, ஆவணங்கள் இல்லையென்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. அதனால், பல தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் சமுதாய மையம் ஒன்றின் வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில், புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் என்ன செய்யவேண்டும் என சில ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் கதவைத் திறக்காதீர்கள், அமைதியாக இருங்கள், எந்த ஆவணத்திலும் கையெழுத்திடாதீர்கள் என்பது போன்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளன.

வழக்கமாக திறந்திருக்கும் அந்த மையத்தின் கதவு, தற்போது மூடியே வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பணி செய்யும் தன்னார்வலர்கள், மையத்துக்கு காலையில் வந்ததும், முதல் வேலையாக எங்கேயாவது புலம்பெயர்தல் அதிகாரிகள் மறைந்திருக்கிறார்களா என கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் வேலையையே துவங்குகிறார்கள்.

எங்களுக்குப் பயமாக இருக்கிறது, எங்கும் வதந்திகள் பரவிவருகின்றன, ஆகவே, எங்களைப் பிடித்து நாடுகடத்திவிடுவார்களோ என பயப்படுகிறோம், எங்களை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...