உலகம்செய்திகள்

பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி! 1000 வீடுகள் எரிந்து சேதம் – அவசரநிலை பிரகடனம்

Share

பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி! 1000 வீடுகள் எரிந்து சேதம் – அவசரநிலை பிரகடனம்

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலியின் மத்திய Valparaiso பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 480 ஹெக்டேர் பரப்பளவை சூழ்ந்துள்ளது.

இதுவரை இந்த காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vina del Mar மற்றும் Valparaiso சுற்றுலாப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இந்த காட்டுத்தீ அழித்துள்ளது.

கடற்கரை நகரங்களை சாம்பல் புகை அடர்ந்த மூடுபனியால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலி ஜனாதிபதி Gabriel Boric, தீயை எதிர்த்துப் போராடுவதற்கும், பேரழிவு காரணமாகவும் அவசரநிலை பிரகடனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...