17 1
இலங்கைஉலகம்செய்திகள்

அதிகரித்துள்ள போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து

Share

அதிகரித்துள்ள போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து

இலங்கை – இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி வரையில் இந்த விமான போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவித்துள்ளார்.

ஈரான் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தெல் அவீவ் விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 7ம் திகதிக்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணங்களை மேற்கொள்வதற்காக விமான பயணங்களை திட்டமிட்டு உள்ளவர்கள் தங்களது பயணங்களை மீள திட்டமிட்டுக் கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் வசித்து வரும் இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூதுவர் அறிவித்துள்ளார்.

முடிந்த அளவு தங்களது பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலக்கீழ் பதுங்கு குழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் வைத்தியசாலை வசதிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...