tamilnih 74 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்

Share

இலங்கையிலிருந்து அபுதாபிக்கு தொழிலுக்காக சென்ற இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி – பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் குறித்த இளைஞன் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், இவர் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பெடுத்து தொடர்பை பேணி வந்துள்ளதுடன், கடந்த 6 ஆம் திகதி முதல் அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.

இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (16) குறித்த இளைஞன் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை என்றும் அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு அந்நாட்டு அரசிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...