25 683fd56e3aa05
உலகம்செய்திகள்

காசா மனிதாபிமான நெருக்கடி குறித்து இலங்கை கரிசனை

Share

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் உருவாகியுள்ள காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்காக இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களையும் தீர்மானங்களையும் அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீன மக்களின் சொந்த நாட்டை உருவாக்கும் உரிமைக்கு இலங்கை வழங்கும் உறுதியான ஆதரவை மீளவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது காஸா நிலைமை குறித்து விஜித ஹேரத் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டுத் தீர்வுத் திட்டமே மிகவும் பொருத்தமானது எனவும் அதுவே அமைதிக்கு வழியமைக்கும் எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டங்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், காசாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளித்ததோடு, இலங்கை-பலஸ்தீன இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

பலஸ்தீனத்திற்கான இலங்கையின் நிலையான ஆதரவை, பிராந்திய மற்றும் உலகளாவிய மேடைகளில் வெளிப்படுத்தியதற்காக பலஸ்தீன தூதுவர் நன்றி பாராட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைத்திட்ட முகவரியின் (UNRWA) மூலம் காசா குழந்தைகள் நிதிக்காக இலங்கை வழங்கிய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை தொடர்பிலும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...