25 683fd56e3aa05
உலகம்செய்திகள்

காசா மனிதாபிமான நெருக்கடி குறித்து இலங்கை கரிசனை

Share

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் உருவாகியுள்ள காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்காக இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களையும் தீர்மானங்களையும் அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீன மக்களின் சொந்த நாட்டை உருவாக்கும் உரிமைக்கு இலங்கை வழங்கும் உறுதியான ஆதரவை மீளவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது காஸா நிலைமை குறித்து விஜித ஹேரத் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டுத் தீர்வுத் திட்டமே மிகவும் பொருத்தமானது எனவும் அதுவே அமைதிக்கு வழியமைக்கும் எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டங்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், காசாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளித்ததோடு, இலங்கை-பலஸ்தீன இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

பலஸ்தீனத்திற்கான இலங்கையின் நிலையான ஆதரவை, பிராந்திய மற்றும் உலகளாவிய மேடைகளில் வெளிப்படுத்தியதற்காக பலஸ்தீன தூதுவர் நன்றி பாராட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைத்திட்ட முகவரியின் (UNRWA) மூலம் காசா குழந்தைகள் நிதிக்காக இலங்கை வழங்கிய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை தொடர்பிலும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...