6 34
இலங்கைஉலகம்செய்திகள்

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி – நாடு கடத்த நடவடிக்கை

Share

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி – நாடு கடத்த நடவடிக்கை

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பொடி பெட்டியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொடி பெட்டி சமீபத்தில் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் லொக்கு பெட்டியின் சகோதரராகும். கிளப் வசந்த கொலைகளை லொக்கு பெட்டியினால் திட்டமிட்டதாக செய்திகள் வந்தன.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலக தலைவர்கள் உள்ளிட்ட 168 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதில் பெரும்பாலான குற்றவாளிகள் டுபாயில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...