இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்

Share
9 21
Share

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்

கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்டாரியோவின் Whitchurch-Stouffville பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Pickering பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும், அது மோசடியானது என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டர்ஹாம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

போலியான இலங்கை கடவுச்சீட்டு, முற்றிலும் போலியான ஆவணம், வருமானம் பெறுவதற்கான மோசடி ஆவணங்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கபிலரசு கருணாநிதி மீது இரண்டு போலி ஆவணம் வைத்திருந்தமை மற்றும் 5,000 டொலருக்கு கீழ் இரண்டு மோசடி முயற்சிகள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும் நீதிமன்றில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...