உலகம்

நீச்சல் போட்டியின்போது நேரலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விளையாட்டு வீரர்

1 16 scaled
Share

நீச்சல் போட்டியின்போது நேரலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விளையாட்டு வீரர்

அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் துயரக் காட்சியை பார்வையாளர்கள் நேரலையில் பார்க்க நேர்ந்தது.

அமெரிக்காவின் டெக்சாசில் CrossFit என்னும் அமைப்பு நடத்தும் விளையாட்டுப்போட்டிகளில் செர்பியா நாட்டவரான லாஸர் (Lazar Dukic, 28) என்னும் வீரரும் கலந்துகொண்டிருந்தார்.

நேற்று காலை நடைபெற்ற நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றிருந்த நிலையில், அந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

லாஸர் நீந்திக்கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீருக்குள் மூழ்கியவர் பிறகு மேலே வரவேயில்லையாம். உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் வந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

லாஸர் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உலகின் ஃபிட்டான விளையாட்டு வீரரைக் கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படும் CrossFit போட்டி, நேற்று துயரத்தில் முடிந்தது.

அந்த துயர சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...