15 20
உலகம்செய்திகள்

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு

Share

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு

வருவாய்க்காக சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் உண்டு. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகள் வருகையை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளன.

அந்த நாடுகள் வரிசையில் தற்போது ஸ்பெயின் நாடும் சேர்ந்துள்ளது!

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு | Spain Introduces Three Year Ban

ஆம், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ளது ஸ்பெயின் நாடு.

ஸ்பெயினுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், 10 வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பதாகக் கூறப்படுகிறது.

ஆக, உள்ளூர்வாசிகளுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகவும், அதிக சுற்றுலாப்பயணிகளால் மக்கள் கூட்டம் ஏற்படுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.

ஆகவே, அந்நாட்டிலுள்ள 43 மாவட்டங்கள், சுற்றுலாப்பயணிகள் வீடுகளை வாடகைக்கு எடுக்க தடை விதித்துள்ளன.

நேற்று முன்தினம், அதாவது செவ்வாயன்று அமுலுக்கு வந்த இந்த தடை, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்பெயின், பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...